கஞ்சா கலந்த லேகியம் தடை செய்யப்பட்ட சிகரெட் வைத்திருந்த இருவருக்கு அபதாரம்!!

Read Time:1 Minute, 54 Second

court-_26அக்கரைப்பற்று பிரதேசத்தில் கஞ்சா கலந்த லேகியம் மற்றும் தடை செய்யப்பட்ட சிகரெட் வைத்திருந்த இருவரை 5 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்துமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதியும் மாவட்டமேலதிக நீதிபதியுமான எச்.எம்.முஹம்மட்பஸீல் நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்

அக்கரைப்பற்று பெரும்குற்றத்தடுப்பு பொலிஸ் சாஜன் யூ.எல்.எம். ஆப்தீன் தலைமையிலான பொலிஸ்குழுவினர் ஞாயிற்றுக்கழமை அக்கரைப்பற்று முதலாம் பிரிவு பிரதேசத்தில் குறித்த இடத்தில் பொலிசார் சோதனை நடவடிக்கையின் போது கஞ்சா கலந்த லேகியம் வைத்திருந்த ஒருவரையும் தடை செய்யப்பட் சிகரெட் 5 வைத்திருந்த ஒருவருமாக இரண்டுபேரை கைது செய்தனர்

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை நேற்று திங்கட்கிழமை அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் நீதிபதி எச்.எம்.முஹம்மட்பஸீல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது குங்சா கலந்த லேகியம் வைத்திருந்தவருக்கு 2 ஆயிரத்து 500 ரூபாவையும் தடை செய்யப்பட்ட 5 சிகரெட் வைத்திருந்தவர் ஏற்கனவே இரண்டு முன்குற்றங்கள் செய்திருந்ததையடுத்து இவருக்கு 2 ஆயிரத்து 500 ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தல் – பிரதமர் உறுதி!!
Next post கணவன்மாரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் மனைவிமார் தொகை அதிகரிப்பு!!