ஷாருக்கான், தீபிகா படுகோனேக்கு கொலை மிரட்டல்!!

Read Time:2 Minute, 10 Second

deepikaஷாருக்கான், தீபிகா படுகோனேக்கு திடீர் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இருவருக்கும் கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

‘ஹேப்பி நியூ இயர்’ படத்தில் ஷாருக்கானும், தீபிகா படுகோனேவும் ஜோடியாக நடித்துள்ளனர். இப்படம் இந்தியா முழுவதும் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடுகிறது. வெளிநாடுகளிலும் கணிசமாக வசூல் ஈட்டி உள்ளது.

தமிழ், தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிட்டு உள்ளனர். இப்படம் முதல் வாரத்தில் ரூ.108.86 கோடி வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில் இருவருக்கும் பாதுகாப்பும் அளிக்கப்பட்டு உள்ளது. சமீப காலமாக இந்தி நடிகர், நடிகைகளுக்கு போனில் மிரட்டல்கள் வருகின்றன.

இதனால் பலர் தனியார் அமைப்புகள் மூலம் பாதுகாவலர்களை ஏற்பாடு செய்து வைத்துள்ளனர். ஷாருக்கானும் தனியார் பாதுகாவலர்களை தனக்கு ஏற்பாடு செய்துள்ளார். அத்துடன் போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டு உள்ளது.

ஷாருக்கான் குண்டு துளைக்காத காரை பயன்படுத்துகிறார். மனைவி சவுரிகானுக்கும் குண்டு துளைக்காத காரை வாங்கி கொடுத்துள்ளார். குடும்ப உறுப்பினர் அனைவரையும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளார்.

தீபிகா படுகோனேக்கு மும்பை போலீசார் திடீர் பாதுகாப்பு அளித்துள்ளனர். மிரட்டல்கள் காரணமாகவே பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக மும்பை பட உலகில் பேசப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகின் முதல் ஜன்னல் இல்லாத விமானம்: விரைவில் அறிமுகமாகிறது!!
Next post அமெரிக்காவில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்-கணக்கெடுப்பில் தகவல்!!