தனி குடித்தனத்துக்கு கணவர் மறுத்ததால் பெண் என்ஜினீயர் தற்கொலை!!

Read Time:1 Minute, 46 Second

9dd9b423-2702-4c90-9827-065fe67c25de_S_secvpfகே.கே.நகர் 5–வது செக்டர் 24–வது தெருவில் குடியிருப்பவர் மணிகண்டன். இவரது மனைவி யுவராணி. திருமணமாகி 8 மாதம் தான் ஆகிறது.

கணவன் – மனைவி இருவரும் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தனர். மணிகண்டன் தனது தாய் மற்றும் சகோதரியுடன் கூட்டு குடித்தனம் நடத்தி வருகிறார்.

நேற்று மணிகண்டன் தாயார் சந்திரா, செங்குன்றத்தில் வசிக்கும் மகள் வீட்டுக்கு சென்று விட்டார். மணிகண்டன் வெளியே சென்று இருந்தார்.

வீட்டில் தனியாக இருந்த யுவராணி மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீடு திரும்பிய மணிகண்டன், மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கே.கே.நகர். போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

திருமணமான நாளில் இருந்து யுவராணி தனிக்குடித்தனம் செல்ல கணவரிடம் வற்புறுத்தி வந்தார். ஆனால், மணிகண்டன் காலம் கடத்தி வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

அவர் 3 மாத கர்ப்பமாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. திருமணமாகி 8 மாதமே ஆவதால் அவரது மரணம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 16 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவனுக்கு தூக்கு!!
Next post தக்கலை அரசியல் பிரமுகரின் கள்ளக்காதலை அம்பலப்படுத்திய தொழிலாளி மீது தாக்குதல்!!