எஸ்.எம்.எஸ். அனுப்பி வரவழைத்து நண்பர்களை சுட்டுக் கொன்ற மாணவன்!!
வாஷிங்டன் பள்ளியில் சக மாணவர்களை சுட்டு கொன்ற மாணவன், அவர்களை சம்பவ இடத்திற்கு அழைக்க குறுஞ்செய்தி அனுப்பி சாப்பிட அழைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாஷிங்டன் ஸ்டேட் உயர்நிலை பள்ளியில் படித்துவந்த ஜெலன் ப்ரைபெர்க் எனும் 15 வயது மாணவன், கடந்த வெள்ளிக்கிழமை சக மாணவர்கள் 2 பேரை சுட்டுக் கொன்றதுடன் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டான். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், ஜெலன் ப்ரைபெர்க் அதே பள்ளியில் படித்த 5 மாணவர்களை உணவு அருந்தும் இடத்திற்கு வரவழைக்க குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், சம்பவ இடத்தில் மாணவர்கள் கூடியபின் அவர்களை சரமாரியாக சுட்டுவிட்டு பின் தானும் தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தெரிவித்த போலீசார், இச்சம்பவத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
விசாரணையின் ஒரு பகுதியாக, சக மாணவர்களை சுட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவனின் சமூக வலைத்தள பதிவுகள், செல்போன் உரையாடல்கள் மற்றும் குறுஞ்செய்திகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அண்மையில் அந்த மாணவனின் சமூக வலைத்தள பதிவுகளில், ‘இது நிலைக்காது…நிலைக்கவே நிலைக்காது, ‘நான் கவனித்திருக்க வேண்டும், ‘நீ எப்போதும் சரியாக இருந்தாய்’ போன்ற வாசகங்கள் இருந்ததாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
Average Rating