மலைநாட்டுக்கான ரயில் சேவை பாதிப்பு!!
Read Time:1 Minute, 20 Second
மத்திய மலைநாட்டுக்கான ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் செல்லும் ரயில் பண்டாரவளை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.
மேலும் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி வரும் ரயில் தனது பயணத்தை பண்டாரவளையில் ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்ல – தெம்மோதர இடையிலான பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ரயில் என்ஜின் மீது நேற்று இரவு மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பதுளை மாவட்ட இணைப்பாளர் எம்.எல்.உதயகுமார தெரிவித்தார்.
மண்சரிவை அகற்றி ரயில் பாதையை சீர்செய்யும் பணியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
Average Rating