VIDEO: ஹல்துமுல்ல பகுதியில் பாரிய மண்சரிவு நூற்றுக்கணக்கானோர் மாயம்!!
Read Time:1 Minute, 6 Second
ஹப்புத்தளை – ஹல்துமுல்ல – மீறியபெந்த பிரதேசத்தில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. பெய்துவரும் கன மழை காரணமாக தற்போதும் மண்சரிவு ஏற்பட்டவண்ணமுள்ளதாக கொஸ்லந்த பொலிஸ் பொறுப்பதிகாரி அத தெரணவிடம் தெரிவித்தார்.
மேலும் மண்சரிவு காரணமாக 8 லயன்களும் 5 கோட்டஸ்களும் மண்ணுக்குள் புதைந்துள்ளதாகவும் அங்கு வசித்த மக்கள் குறித்து தெரியவரவில்லை என்றும் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இதேவேளை, மண்சரிவு இடம்பெற்ற பகுதிக்கு மீட்புப் பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி அத தெரணவிடம் குறிப்பிட்டார்.
Average Rating