தீபிகாவை ஜாக்கிரதையாகத் தான் கையாள வேண்டும்!!

Read Time:3 Minute, 12 Second

Untitled-126கொடி அசைய மறுத்தாலும் காற்று விடுவதில்லை. வேண்டுதல் மாதிரி வாராவாரம் தீபிகா படுகோனேவை பற்றி எழுத வேண்டியதாகிறது.

பொது நிகழ்ச்சிகளுக்கு வரும்போது கொஞ்சம் ‘தாராளமாக’ வருவது தீபிகாவின் ஸ்டைல். அம்மாதிரி ஒரு விழாவில் ஆங்கில நாளிதழ் போட்டோகிராபர் ஒருவர் ‘டாப் ஆங்கிளில்’ கச்சிதமாக படம் பிடித்துவிட்டார். அந்தப் படம் நாளிதழிலும் பிரசுரிக்கப்பட்டது.

போதாதற்கு அந்த நாளிதழின் ட்விட்டர் கணக்கில் ஏடாகூடமான தலைப்பிட்டு இணையத்திலும் பரப்பினார்கள். சாதாரணமாக இது மாதிரி விடயங்களுக்கு டென்ஷன் ஆகாத தீபிகா, ஏனோ தீபாவளி சரவெடியாக வெடித்துத் தள்ளிவிட்டார்.

அதே ட்விட்டரில் ஊடகங்களுக்கு கடுமையான பதிலடி கொடுத்தார். ‘‘ஆமாம். நான் ஒரு பெண். எனக்கு மார்பகங்கள் இருக்கின்றன. உங்களுக்கு அதனால் ஏதும் பிரச்னையா?’’ என்று அவர் கேட்க, சமூக வலைத்தளங்களில் புழங்குபவர்கள் மத்தியில் சுனாமியாய் அனுதாப அலை எழுந்தது.

திடீர் பெண்ணியப் போராளி இமேஜ் அவருக்கு கிடைத்துவிட்டது. கூடுதலாக பாலியல் வழக்கில் கைது செய்யப்படும் நடிகைகளை ஊடகங்கள் எப்படி நடத்துகிறார்கள் என்றும் தீபிகா கண்ணகியாக மாறி நியாயம் கேட்க ஆரம்பித்துவிட்டார்.

பிறகென்ன… ஃபேஸ்புக், ட்விட்டர் என்று சகட்டுமேனிக்கு போனவர்கள் வந்தவர்கள் எல்லாம் மொத்தமாக சேர்ந்து அந்த நாளிதழை வசைபாட ஆரம்பித்துவிட்டார்கள். பயந்துபோன நாளிதழ் தன்னுடைய ட்விட்டை அழித்து விட்டது. நடிகைகளின் பிரைவசியில் தலையிடுவதுதான் ஊடகங்களுக்கு செய்தியா என்று தீபிகாவுக்கு ஆதரவாக பாலிவுட் பிரபலங்களும் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்

தீபிகாவுக்கு கிடைத்திருக்கும் இந்த அதிரடி புரட்சி இமேஜின் காரணமாக, இப்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படங்களில் கவர்ச்சி காட்டினால் அது எடுபடுமா என்று அவரை வைத்து படமெடுக்கும் இயக்குநர்களும், தயாரிப்பாளர்கள் ரகசியக் கூட்டம் போட்டு கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இனிமேல் நாமும் கொஞ்சம் ஜாக்கிரதையாகதான் தீபிகாவை கையாள வேண்டும் போலிருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விலங்குகளுக்கு தமிழ் நடிக, நடிகைகளின் பெயர்கள்!!
Next post திருச்சியில் இலங்கை தமிழ் பெண்ணை காணவில்லை!!