விலங்குகளுக்கு தமிழ் நடிக, நடிகைகளின் பெயர்கள்!!

Read Time:3 Minute, 19 Second

1585873738Untitled-1டெல்லி தேசிய உயிரியல் பூங்கா 720 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. பூங்காவின் பெரும்பாலான விலங்குகளுக்கு அதிகமாக தமிழ் திரைப்பட நட்சத்திரங்களின் பெயர்கள் சூட்டப்பட்டு உள்ளன.

ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட யானைக்கு ஜெய்சங்கர், மற்றொரு யானைக்கு சிவாஜி கணேசன், மஞ்சள் புலிக்கு ஸ்ரீபிரியா, மற்றொரு பெண் புலிக்கு அனுராதா, கரடிக்கு செந்தில் என்று பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதில் பார்வையாளர்கள் அதிகம் பார்க்க விரும்பும் வெள்ளைப் புலிக்கு விஜய் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. (இந்தப்புலி சமீபத்தில் தனது கூண்டில் விழுந்த இளைஞனை கொன்றது குறிப்பிடத்தக்கது). இந்த வெள்ளை சிறுத்தையின் ஆண் குட்டியின் பெயர் சரவணன்.

இது குறித்து இந்த உயிரியல் பூங்கா விலங்குகளுக்கான மூத்த மருத்துவ அதிகாரி டாக்டர் பன்னீர் செல்வம் கூறும்போது, “தேசிய விலங்குகள் சட்டப்படி வன விலங்குகளை வீட்டு விலங்குகளை போல் பழக்கக்கூடாது. என்றாலும் அதைப்போல் குறைந்தபட்சம் பெயர் வைத்தால்தான் அவற்றை எங்களால் அடையாளப்படுத்தி பார்க்கமுடிகிறது. விலங்குகளின் பயிற்சியாளர்கள் அவற்றின் பெயரை சொல்லி அழைக்கும் போது, அவை திரும்பிப் பார்க்கின்றன” என்றார்.

இதற்கு உதாரணமாக பழைய சம்பவம் ஒன்றையும் அவர் நினைவு கூர்ந்தார். “சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் வளர்ந்து வந்த ஒரு சிங்கக்குட்டி ஒருநாள் இரவு மருத்துவமனையின் காட்டில் புகுந்து ஓடி விட்டது. இருளில் எவ்வளவு தேடியும் இது சிக்கவில்லை. பிறகு அந்த சிங்கக் குட்டியின் பயிற்சியாளர் அதன் பெயரைச் சொல்லி அழைத்தபோது, ஒரே குரலுக்கு திரும்பிவிட்டது” என்றார்.

விலங்குகளுக்கு பெயர்கள் சூட்டுவதில் அரசியல் வாடை வீசாமல் இல்லை. மத்திய வனத்துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா இங்கு வந்தபோது அவரிடம் ஒரு விலங்குக்கு பெயர் வைக்கும்படி கோரப்பட்டுள்ளது. இதற்கு அவர் தனது கட்சித் தலைவரின் தாயார் அஞ்சுகம் பெயரை சூட்டினார்.

ஹைதராபாத்தில் இருந்து இங்குவந்த ஆசிய சிங்கத்துக்கு ரோஹன் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பேரன் (பிரியங்கா வதேராவின் மகன்) பெயராகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணம் செய்து வைக்காததால் தாயை சுட்டுக் கொன்ற மகன்!!
Next post தீபிகாவை ஜாக்கிரதையாகத் தான் கையாள வேண்டும்!!