திருமணம் செய்து வைக்காததால் தாயை சுட்டுக் கொன்ற மகன்!!

Read Time:1 Minute, 57 Second

721145211Untitled-1வடகிழக்கு டெல்லியில் உள்ள கோகுல்புரி பகுதியை சேர்ந்தவர், கம்லேஷ் (54). இவரது கணவர் பிரபல நிதி நிறுவனம் ஒன்றில் பாதுகாவலராக பணியாற்றி வருகின்றார்.

இந்த தம்பதியரின் மகனான குல்தீப் (32), வேலைக்கு செல்லாமல் வீணாக ஊரைச் சுற்றி, பொழுதைக் கழித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற குல்தீப், இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

நேற்று அதிகாலை சுமார் 05.00 மணியளவில் வீட்டுக்குள் நுழைந்த மகனை அவரது தாயார் கம்லேஷ் கண்டித்தார். இதனால், ஆத்திரமடைந்த குல்தீப், தனது தந்தையின் இரட்டைக் குழல் துப்பாக்கியை எடுத்து, பெற்ற தாய் என்றும் பாராமல் கம்லேஷின் நெஞ்சை குறிவைத்து சுட்டார்.

குண்டடிபட்டு, இரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த கம்லேஷ், சம்பவ இடத்திலேயே பலியானார். அங்கிருந்து தப்பியோட முயன்ற குல்தீப்பை அவரது சகோதரர் விரட்டிப் பிடித்து, பொலிசில் ஒப்படைத்தார்.

தனக்கு 30 வயதுக்கு மேல் ஆகியும் இன்னும் திருமணம் செய்து வைக்கவில்லை என்று குடும்பத்தாரிடம் குல்தீப் அடிக்கடி தகராறு செய்துவந்ததாக கூறப்படுகின்றது.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தின் விளைவாக கம்லேஷை அவர் சுட்டுக் கொன்றிருக்கலாம் என்று அவரது உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓடும் ரெயிலில் பாலியல் தொல்லை: சமயோசிதமாக செயல்பட்டு தப்பித்த பெண்!!
Next post விலங்குகளுக்கு தமிழ் நடிக, நடிகைகளின் பெயர்கள்!!