பதுளை மண்சரிவுக்கு அமெரிக்கா அனுதாபம்: உதவி செய்ய தயார் என அறிவிப்பு!!

Read Time:1 Minute, 30 Second

480074918usaபதுளை மாவட்டத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவு அனர்த்தம் தொடர்பில் ஐக்கிய அமெரிக்கா ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டுள்ளது.

இந்த மண்சரிவு குறித்து இலங்கையில் உள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில்,

கொஸ்லாந்த பகுதியில் அண்மையில் இடம்பெற்ற மண்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமது அன்புக்குரியவர்களை இழந்தும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தும் இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட பெரும் இழப்புக்களை, சேதங்களை அடையாளம் கண்டும் வரும் நிலையில் அரசாங்கத்திற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவியளிப்பதற்கு நாம் தயாராக உள்ளோம்.

இலங்கை அரசாங்கத்தினதும் அதன் படையினரினதும் துரிதமான பிரதிபலிப்புகள் மற்றும் துணிவுடனான தேடுதல் மீட்புப் பணிகளை நாம் பாராட்டுகிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்பிற்கு ஒருநாள் முழுதும் நீர்த்தடை!!
Next post தெமட்டகொடயில் ஒருவர் கொலை!!