பேஸ்புக் காதல்: பள்ளி மாணவியை கேரளாவுக்கு அழைத்து சென்ற வாலிபர் கைது!!

Read Time:3 Minute, 38 Second

fadfcd0f-3a4d-4580-8dfb-b01335c099f8_S_secvpfமங்களூர் புறநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட கங்கநாடி பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 16, பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும், கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டம் அம்பலபுரா பகுதியை சேர்ந்த ஜெர்சி பிரான்சிஸ் (18) என்பவருக்கு ‘பேஸ்புக்’ மூலமாக கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. ஜெர்சி பிரான்சிஸ் அந்த பகுதியில் ‘வெல்டிங்’ வேலை செய்து வருகிறார்.

இதையடுத்து, இருவரும் ‘பேஸ்புக்’ மூலமாக அடிக்கடி பேசி பழகி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, கடந்த 23–ந் தேதி ஜெர்சி பிரான்சிஸ், ஜெயலட்சுமியை பார்க்க ரெயில் மூலமாக மங்களூர் ரெயில் நிலையத்திற்கு வந்தார்.

பின்னர், இருவரும் மங்களூர் ரெயில் நிலையத்தில் சந்தித்து பேசிக் கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து, ஜெர்சி பிரான்சிஸ், ஜெயலட்சுமியை தன்னுடன் கேரளா மாநிலம் அம்பலபுராவிற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வீட்டை விட்டு வெளியே சென்ற ஜெயலட்சுமி அதிக நேரம் ஆனபோதிலும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், மாயமான ஜெயலட்சுமியை அவர்கள் அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தனர். ஆனால், எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. பின்னர், தனது மகளை காணவில்லை என்று ஜெயலட்சுமியின் பெற்றோர் மங்களூர் புறநகர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், ஜெயலட்சுமி பயன்படுத்திய ‘பேஸ்புக்’ முகவரி மற்றும் கடவுச்சொல் (பாஸ்வர்டு) ஆகியவை போலீசாருக்கு தெரியவந்தது. அதை ஆய்வு செய்ததில், போலீசாருக்கு, ஜெயலட்சுமியும், கேரளா மாநிலம் அம்பலப்புரா பகுதியை சேர்ந்த ஜெர்சி பிரான்சிசும் அதிகளவில் ‘பேஸ்புக்’ மூலமாக தகவல் பரிமாறிக் கொண்டதும், அவர் ஜெயலட்சுமியை கேரளாவிற்கு அழைத்து சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, மங்களூர் புறநகர் போலீசார் நேற்று கேரளா மாநிலம் அம்பலப்புரா கிராமத்திற்கு சென்று ஜெர்சி பிரான்சிசை கைது செய்து ஜெயலட்சுமியை மீட்டனர். பின்னர், ஜெயலட்சுமியை மங்களூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாயை பாலியல் வன்கொடுமையிலிருந்து சமயோசிதமாக காப்பாற்றிய 4 வயது சிறுமி!!
Next post கிஸ் ஆப் லவ் – காதலர்களுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் எதிர்ப்பு!!