தாயை பாலியல் வன்கொடுமையிலிருந்து சமயோசிதமாக காப்பாற்றிய 4 வயது சிறுமி!!

Read Time:1 Minute, 30 Second

8265b913-4355-4ef0-b6a2-898e7d948f3b_S_secvpfமும்பையில் பாலியல் வன்கொடுமையிலிருந்து தனது தாயை 4 வயது சிறுமி ஒருவர் சமயோசிதமாக செயல்பட்டு காப்பாற்றியுள்ளார்.

மும்பை முலுந்த் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த சர்வந்த் ஜெபால் எனும் நபர் அந்த வீட்டில் இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயன்றார். அந்த நபர் வீட்டினுள் வந்தபோது தூங்குவது போல நடித்த அப்பெண்ணின் 4 வயது மகள், பின் வீட்டிலிருந்து வெளியே வந்து கதவை பூட்டிவிட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்காக அழைத்துள்ளார்.

சிறுமியின் சமயோசித செயலால் பெண்ணை பாலியல் கொடுமைக்கு உட்படுத்த முயன்ற நபரை பிடித்த மக்கள், அவரை உடனடியாக காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட நபர் மீது சட்டப்பிரிவு 354 மற்றும் 452-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதும், தற்போது கைது செய்யப்பட்டவர் ஏற்கனவே பல பெண்களிடம் தகாத முறையில் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாயர்புரம் அருகே விதவை பெண்ணை கற்பழிக்க முயற்சி: ராணுவ வீரர் கைது!!
Next post பேஸ்புக் காதல்: பள்ளி மாணவியை கேரளாவுக்கு அழைத்து சென்ற வாலிபர் கைது!!