துண்டிக்கப்பட்ட தலையை எடுக்க சிறுவனை வற்புறுத்திய காவல் துறையினர் சஸ்பெண்டு!!
லக்னோவில் உள்ள சார்பாக் ரெயில் நிலையத்தில் ரெயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் துண்டிக்கப்பட்ட தலையை எடுக்கும்படி சிறுவனை வற்புறுத்திய காவல் துறையினர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பீகாரை சேர்ந்த ராமானந்த் என்பவர் லக்னோ சார்பாக் ரெயில் நிலையத்தில் ரெயில் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்த அவரது சடலம் வெகு நேரமாக ரயில் தண்டவாளத்தில் இருந்துள்ளது. சடலத்தை மீட்க காவல் துறையினர் விரைவாக செயல்படாததால் நாய், எலி போன்றவை சடலத்தை சாப்பிட துவங்கியதாகவும், பொதுமக்கள் அவற்றை விரட்டி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அங்கு இருந்த இளைஞன் மற்றும் சிறுவனை துண்டிக்கப்பட்ட தலையையும், சடலத்தையும் எடுக்க வற்புறுத்தியதாக தெரிகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் புகைப்படமும் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறை டி.ஐ.ஜி (ரெயில்வே) ஜாவீத் அகமத், உதவி ஆய்வாளர் ஒருவரையும், இரு காவல் துறையினரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating