சாயர்புரம் அருகே விதவை பெண்ணை கற்பழிக்க முயற்சி: ராணுவ வீரர் கைது!!
Read Time:1 Minute, 22 Second
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள செவலூரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி சண்முககனி (வயது 33). ராமகிருஷ்ணன் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சண்முககனி தனியாக வசித்து வந்தார்.
சம்பவத்தன்று அவர் சாயர்புரம் வங்கியில் பணம் டெபாசிட் செய்ய சென்றார். கொம்புகாரன்பொட்டல் அருகே செல்லும் போது, அந்த வழியாக பெருங்குளத்தை சேர்ந்த ராணுவ வீரர் நாகராஜ் (24) என்பவர் வந்தார். அவரிடம் சண்முககனி, தன்னை மோட்டார் சைக்கிளில் வங்கிக்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் நாகராஜ் மறுத்துவிட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது நாகராஜ், சண்முககனியின்கையை பிடித்து இழுத்து அவரை கற்பழிக்க முயற்சி செய்தாராம்.
இது குறித்து சாயர்புரம் போலீசில் சண்முககனி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நாகராஜை கைது செய்தனர்.
Average Rating