கொள்ளுபிட்டியில் பாரிய மரம் முறிந்து வீழ்ந்து ஒருவர் படுகாயம்!!
Read Time:54 Second
கொழும்பு – கொள்ளுபிட்டி மகானாம கல்லூரிக்கு அருகில் (30) இரவு பாரிய மரமொன்று சரிந்து பிரதான வீதிக்கு குறுக்கே விழுந்ததில் ஒருவர் காயமடைந்ததோடு முச்சக்கர வண்டி மற்றும் ஜீப் ஆகியவற்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
பாரிய மரத்தில் முச்சக்கரவண்டி சிக்குண்டதுடன் சாரதி காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் இணைந்து மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் டுப்லிகேசன் வீதியூடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
Average Rating