வெளிநாட்டுக்கு கழிவுத் தேயிலை தூள் கடத்திய 14 பேர் கைது!!
Read Time:1 Minute, 4 Second
வெளிநாடுகளுக்கு கழிவுத் தேயிலை தூள் ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்ட 14 பேர் சப்புகஸ்கந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சப்புகஸ்கந்த ஹெயின்துடுவ பிரதேசத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றின் உரிமையாளர் உள்ளிட்ட 14 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டுக்கு கழிவுத் தேயிலை தூள் ஏற்றுமதி செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இன்று (31) மஹர நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
சப்புகஸ்கந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating