ரெயில் பெட்டியில் பெண்ணை எரித்து கொன்ற தமிழக வாலிபர் கைது!!
கேரள மாநிலம் கண்ணூர் ரெயில் நிலையத்தில் கடந்த 20–ந்தேதி ஆளில்லாத ரெயில் பெட்டியில் இளம்பெண் ஒருவர் எரித்து கொல்லப்பட்டார்.
அதிகாலை நேரத்தில் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் அந்த பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்த வாலிபர் அந்த பெண் ரெயில் பெட்டியில் ஏறியதும் அவர் மீது மண்ணெண்ணையை ஊற்றி எரித்து விட்டு தப்பி ஓடி விட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த பயணிகள் தெரிவித்தனர்.
இதுபற்றி கண்ணூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், தீயில் கருகி இறந்த பெண் பாத்திமா என்றும், மலப்புரம் மாவட்டம் கொண்டோத்தி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிய வந்தது.
அந்த பெண்ணை எரித்துக் கொன்ற வாலிபர் பற்றி பயணிகள் கொடுத்த அடையாளத்தின் பேரில் அவரது உருவப்படத்தை கம்ப்யூட்டரில் வரைந்து போலீசார் தேடினர்.
இதில், நேற்று திருச்சூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற வாலிபர் ஒருவர் சிக்கினார். அவர், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். அவரது செல்போனை சோதனை செய்தபோது, அதில் எரித்துக்கொல்லப்பட்ட பாத்திமாவின் படம் இருந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating