சிறுமியை கொலை செய்து கற்பழித்த தையல்காரர்: மும்பையில் கொடூரம்!!
மும்பையில் உள்ள கோவண்டி பகுதியில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயன்று, கொலை செய்த நபர் அச்சிறுமியின் இறுதிசடங்கிற்கு வந்திருந்தது தெரியவந்துள்ளது.
கோவண்டியில் உள்ள பைகன்வாடி பகுதியில் டெய்லர் கடை நடத்திவரும் நபர் ஒருவர், தனது கடைக்கு வந்திருந்த 12 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். ஆனால், அப்போது சிறுமி கூச்சலிட்டதால் அச்சமடைந்த நபர் சிறுமியை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, சடலத்தை அப்புறப்படுத்தியுள்ளார்.
குப்பை தொட்டியில் சிறுமியின் சடலத்தை மீட்ட காவல் துறையினர், விசாரணைக்கு பின் தையல்காரரை கைது செய்தனர். காவல் துறையினரிடம் தான் சிறுமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்ட அவர், சிறுமியின் சடலத்துடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார்.
சிறுமியின் கொலை குறித்து காவல்துறையினர் விசாரித்துவந்த போது, கொலை செய்த தையல்காரரும் பொதுமக்களுடன் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டதும், சிறுமியின் இறுதிசடங்கிற்கு வந்திருந்ததும் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Average Rating