காண்டிராக்டர் வீட்டில் 50 பவுன் நகை மாயம்: வேலைக்காரியிடம் விசாரணை!!
Read Time:1 Minute, 12 Second
தூத்துக்குடி குரூஸ்புரத்தை சேர்ந்தவர் சூசை. இவர் பிரபல கட்டிட காண்டிராக்டராக உள்ளார். இவரது மனைவி ராஜம்மாள் (வயது 80). சம்பவத்தன்று வீட்டில் உள்ள பீரோவில் இருந்த 50 பவுன் நகை மாயமானது. அதிர்ச்சியடைந்த ராஜம்மாள் வீடு முழுவதும் நகையை தேடிப்பார்த்தார். எங்கும் நகை கிடைக்கவில்லை.
இதையடுத்து ராஜம்மாள் தூத்துக்குடி வடபாகம் போலீசில் புகார் செய்தார். புகாரில் எனது வீட்டில் இருந்த 50 பவுன் நகை மாயமாகி விட்டது. வீட்டில் வேலை செய்து வரும் அந்தோணியம்மாள் என்பவர் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. எனவே அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என கூறியிருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தோணியம்மாளை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating