ஆபாச படம் எடுத்து நகை, பணம் மிரட்டி பறிப்பு: வேலூர் சிறை காவலர் மீது பெண் புகார்!!
Read Time:1 Minute, 22 Second
கிருஷ்ணகிரி கீழ்வீதியை சேர்ந்தவர் கேத்ரின்மேரி(35). திருமணமான இவர் வேலூர் பாகாயம் போலீஸ் நிலையத்துக்கு ஆன்லைன் மூலமாக புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:–
வேலூர் ஜெயிலில் இளநிலை அலுவலராக பணிபுரியும் பார்த்தீபராஜா என்பவருடன் கடந்த 2007–ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது. நான் எனது கணவருக்கு தெரியாமல் பார்த்தீப ராஜாவுடன் உடலுறவு வைத்து கொண்டேன். எனக்கு தெரியாமல் நாங்கள் உல்லாசமாக இருந்ததை பார்த்தீபராஜா படம் பிடித்துள்ளார். அந்த படத்தை காண்பித்து என்னை மிரட்டி இதுவரை 25 பவுன் நகையும், ரூ. 10 லட்சம் பணமும் வாங்கியுள்ளார்.
மேலும் பணம் கேட்டு மிரட்டி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணம், நகையை மீட்டு தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிறைக்காவலர் பார்த்தீபராஜா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating