14 வயது சிறுமியை 2–வது திருமணம் செய்த வியாபாரி: சமூகநலத்துறை அதிகாரிகள் மீட்டனர்!!
Read Time:1 Minute, 20 Second
கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை சேர்ந்தவர் பாபு (வயது 28). இரும்பு வியாபாரி. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகி இருந்தது.
இந்த நிலையில் சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை அவர் 2–வது திருமணம் செய்து பெண்ணாடத்திற்கு அழைத்து வந்திருந்தார்.
இதுபற்றி கடலூர் மாவட்ட சமூகநலத்துறைக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட சமூகநல அதிகாரி புவனேஸ்வரி தலைமையில் அதிகாரிகள் சென்று அந்த சிறுமியை மீட்டு வந்தனர். தற்போது சிறுமியை கடலூர் பெண்கள் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைத்துள்ளனர்.
சிறுமியை 2–வது திருமணம் செய்த பாபுவிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர் சிறுமியை பணம் கொடுத்து விலைக்கு வாங்கி திருமணம் செய்திருப்பதாக சமூகநலத்துறையிடம் சிலர் புகார் கூறி இருக்கிறார்கள். அதுபற்றியும் விசாரணை நடந்து வருவதாக சமூகநலத்துறை அதிகாரிகள் கூறினார்கள்.
Average Rating