காதல் திருமணம் செய்த பெண் போலீசுக்கு அடி–உதை: மாமியார்–கொழுந்தனிடம் விசாரணை!!
பெரம்பூர் செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் தினேஷ். பார்சல் சர்வீசில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பாத்திமா ஜெர்சி. எழும்பூர் போக்குவரத்து போலீசில் காவலராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் பாத்திமா ஜெர்சியின் நகைகள் சிலவற்றை மாமியார் லட்சுமி கலா விற்று செலவு செய்ததாக தெரிகிறது. இதனை பார்த்திமா ஜெர்சி கண்டித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மாமியார் லட்சுமி கலா, கொழுந்தன் தினேஷ்குமார் ஆகியோர் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த பாத்திமா ஜெர்சிக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து செம்பியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உக்கிரபாண்டி வழக்குப்பதிவு செய்து லட்சுமிகலா, தினேஷ் குமாரை பிடித்து விசாரித்து வருகிறார்.
Average Rating