மண்சரிவு அபாயம் – 400 பேர் இடம்பெயர்வு!!
Read Time:1 Minute, 25 Second
கொத்மலை – டன்சினன் தொழிற்சாலைக்கு உட்பட்ட பகுதியில் மண்சரிவு அபாயமுள்ளதாக கூறப்பட்டதை அடுத்து, அங்குள்ளவர்கள் இடம்பெயர்ந்து தேயிலை தோட்ட தொழிற்சாலைக்கு அருகில் உள்ள மண்டபத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
92 குடும்பங்களைச் சேர்ந்த 400 பேர் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளனர்.
பிரதி அமைச்சர் திகாம்பரத்தின் பணிப்புரைக் கிணங்க மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் விஜயம் செய்து நிலைமையை ஆராய்ந்தார்.
அதன்போது தோட்டத்தில் உள்ள லயன் குடியிருப்புகள், தனி வீடுகள், புதிதாக அமைக்கப்பட்ட மாடிவீடுகள் போன்றவற்றின் நிலம் தாழ்ந்து காணப்பட்டமையும் சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதையும் அவதானித்துள்ளனர்.
இந்த இடத்திற்கு விஜயம் செய்த கட்டிட ஆய்வு பிரிவினர் பரிசோதனைகள் செய்த பின் குறித்த பகுதியில் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
Average Rating