வளர்த்தவரையே காட்டிக் கொடுத்த நாய்!!
Read Time:1 Minute, 17 Second
அமெரிக்காவில் உள்ள அலபாமா பகுதியில் போதை மருந்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்ய அவர் வளர்த்த நாய் உதவி செய்த சம்பவம் நடந்துள்ளது.
மத்திய அலபாமா பகுதியில் வசித்து வந்த எட்வின் ஹெண்டர்சன் எனும் நபரை போதை மருந்து வைத்திருந்த குற்றத்திற்காக பொலிஸார் கைது செய்ய வந்தனர்.
அப்போது தப்பி ஓடிய எட்வினை தொடர்ந்து செல்லும்படி பொலிஸார் எட்வின் வளர்த்து வந்த நாய்க்கு கட்டளையிட்டனர். உடனடியாக எட்வினை தொடர்ந்து சென்ற வளர்ப்பு நாய் பொலிசார் அவரை கைது செய்ய உதவி புரிந்தது.
இச்சம்பவம் குறித்து தெரிவித்த பொலிஸ் செய்தி தொடர்பாளர், ´ஹென்டர்சன் மீது பொலிஸாருக்கு கீழ்படியாதது, போதை மருந்து வைத்திருந்தது போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.
Average Rating