இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட தங்கத்துடன் ஒருவர் கைது!!
Read Time:1 Minute, 9 Second
இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக தங்கத்தைக் கடத்தும் ஒருவர் சென்னையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்திய பாதுகாப்புப் பிரிவினரால் சென்னை – அன்னாநகரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவர் கைதாகியுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
சந்தேகநபர் வசமிருந்து, இரண்டரைக் கோடி இந்திய ரூபாய்கள் மதிப்புள்ள ஒன்பது கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த தங்கத்தை இலங்கையில் இருந்து இராமேஸ்வரத்திற்கு கடல் மார்க்கமாக கடத்தியதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Average Rating