கொள்ளை: 4 பெண்கள் உட்பட 6 பாகிஸ்தானியர்கள் கைது!!
Read Time:1 Minute, 7 Second
தெல்தெனிய – மொரகோல்ல பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆறு பாகிஸ்தானியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மோட்டார் வாகனம் ஒன்றில் பொருட்கள் கொள்வனவு செய்வது போல் வந்த இவர்கள், வர்த்தக நிலையத்தில் இருந்த, 40,000 ரூபா பணத்தைக் கொள்ளையிட்டுள்ளனர்.
இது குறித்து தெல்தெனிய பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இவர்களுல் நான்கு பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களை தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Average Rating