7 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் தொடர்கிறது!!
Read Time:1 Minute, 16 Second
மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகள் தொடர்பில் தொடர்ந்தும் ஆய்வு செய்து வருவதாக தேசிய கட்டுமாண ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மண்சரிவு ஏற்பட்ட கொஸ்லாந்தை – மீறியபெத்தை பகுதியிலும் ஆய்வு செய்யப்பட இருப்பதாகவும் ஆனால் அங்கு நிலவும் சீரற்ற காலநிலையால் ஆய்வு நடவடிக்கை தாமதமாவதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் ஆய்வுகளை விரைவில் மேற்கொண்டு மாவட்ட செயலாளர்களுக்கு அறிக்கை சமர்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 7 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாயம் தொடர்வதாக தேசிய கட்டுமாண ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பதுளை, நுவரெலியா, மாத்தளை, கேகாலை, கண்டி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Average Rating