மலவாயிலில் மறைத்து தங்கம் கடத்திய இந்தியர்கள் இருவர் கைது!!
Read Time:1 Minute, 1 Second
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயற்சித்த இந்தியர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (03) அதிகாலை 1 மணியளவில் யு.எல்.172 என்ற விமானத்தின் மூலம் இந்தியாவின் பெங்களூர் நோக்கிச் செல்லவிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியர்கள் மலவாயிலில் மறைத்து வைத்து தங்கம் கடத்தியதாக விமான நிலைய சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களிடம் இருந்து 20 லட்சம் பெறுமதியான 400 கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளது.
தங்கம் அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் 10 000 ரூபா அபராதத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
Average Rating