சங்கரன்கோவிலில் மனைவியை தாக்கிய வங்கி மேலாளர் கைது!!
சங்கரன்கோவில் என்.ஜி.ஓ.காலனியை சேர்ந்தவர் மணிமாறன் (வயது32). இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த இளமதி (26) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மணிமாறன் புதுக்கோட்டை மாவட்டம் மேலதாணியத்தில் உள்ள ஐ.ஓ.பி.வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் திருமணமாகியதும் இருவரும் மேலதாணியத்தில் வசித்து வந்தனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இளமதி சங்கரன்கோவிலில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். இதனிடையே கர்ப்பிணியாக இருந்த இளமதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.
சம்பவத்தன்று குழந்தையை பார்ப்பதற்காக மணிமாறன் சங்கரன்கோவிலில் உள்ள இளமதி வீட்டிற்கு வந்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்படவே ஆத்திரமடைந்த மணிமாறன் இளமதியை சரமாரி தாக்கியுள்ளார். அதனை தடுக்க முயன்ற இளமதியின் தந்தை கருப்பசாமியும் தாக்கப்பட்டார்.
இது குறித்து இளமதி சங்கரன்கோவில் தாலுகா போலீசில் புகார் செய்தார் .போலீசார் விசாரணை நடத்தி மணிமாறனை கைது செய்தனர்.
Average Rating