18 துப்பாக்கிகளுடன் 7 பேர் கைது!!
Read Time:1 Minute, 2 Second
நாட்டின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கைத்துப்பாக்கி வைத்திருந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி, மாதம்பே, கடுவல மற்றும் ஹங்வெல்ல ஆகிய பகுதிகளில் இந்த தேடுதல் நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
களுத்துறை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்கவிற்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இத்தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.
தேடுதலின் போது சந்தேகநபர்கள் வசமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 18 கைத்துப்பாக்கிகளும் ரவைகளும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating