துப்பாக்கி தயாரித்து பயன்படுத்திய சூத்திரதாரிகள் இன்று நீதிமன்றில் ஆஜர்!!
Read Time:1 Minute, 21 Second
சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் இரக்குவானை – அடகலம்பன்ன பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை வலய குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபரிடம் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 4 ரிவோல்வர், வெளிநாட்டு தயாரிப்பு கைக்குண்டு 2, 5 ரவைகள், துப்பாக்கி தயாரிக்க பயன்படுத் இரும்பு போன்றவை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னதாக சந்தேகநபர் தயாரித்த துப்பாக்கிகளை பயன்படுத்திய 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் மாதம்பே, இரத்தினபுரி, இரக்குவானை, நவகமுவ மற்றும் ஹங்வெல்ல பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
சந்தேகநபர்கள் இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
Average Rating