பச்சிளம் பெண் குழந்தையை கொன்று ஆற்றில் வீசிய தந்தை கைது!!
Read Time:1 Minute, 0 Second
மேற்கு வங்காள மாநிலம், ஹவுரா மாவட்டத்தில் ஓடும் ஹூக்ளி ஆற்றில், பிறந்து சில மணி நேரங்களே ஆன ஒரு பெண் குழந்தையின் பிரேதம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து, அந்த பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்துவந்தனர்.
அதேசமயம், தனது வீட்டில் குடியிருக்கும் ஒருவர், தனது பெண் குழந்தையை கொன்று ஆற்றில் வீசிவிட்டதாக பேலூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் அளித்தார். இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார், அந்த வீட்டில் வசித்த சுப்ரஜா சாட்டர்ஜி என்ற குற்றவாளியை கைது செய்தனர்.
Average Rating