மீனவர் பிரச்சினையை சிலர் அரசியலாக்க முயற்சி!!

Read Time:1 Minute, 21 Second

1390432870Untitled-1ஐந்து மீனவர்களின் பிரச்சினையையும் சிலர் அரசியலாக்கப் பார்ப்பதாக, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு கூறியதாக நக்கீரன் செய்திகள் குறிப்பிடுகின்றன.

இங்கு அவர் மேலும் கூறியதாவது,

இது வழக்கு விஷயம் என்பதால் சட்ட ரீதியாகவே தீர்வுகாண முடியும். 5 மீனவர்களையும் மரண தண்டனையில் இருந்து விடுவிப்பதற்கான அத்தனை முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. மேலும், மனிதாபிமான அடிப்படையில், இலங்கையில் உள்ள இந்திய தூதர், சிறையில் சென்று தமிழக மீனவர்களை சந்தித்துள்ளார்.

அவர்கள் தங்களது உறவினர்களுடன் செல்போனில் பேசுவதற்கும் ஏற்பாடு செய்துள்ளார். இவ்வளவு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இங்குள்ளவர்கள் அதை அரசியல் ஆக்க பார்க்கிறார்கள். இவ்வாறு கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை அணி இந்தியாவில் விளையாடக் கூடாது என எதிர்ப்பு!!
Next post இலங்கை அகதிகளை நடத்தும் விதம் குறித்து ஆஸி.க்கு எதிராக அறிக்கை!!