இலங்கை அகதிகளை நடத்தும் விதம் குறித்து ஆஸி.க்கு எதிராக அறிக்கை!!
Read Time:51 Second
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் சித்திரவதைகளுக்கு எதிரான கமிட்டியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பில், அவுஸ்திரேலிய அரசாங்கம் நியாயமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மனித உரிமை அமைப்புக்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் இணைந்து இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன.
Average Rating