பொறுத்தது போதும்… பொங்கி எழுந்த தீபிகா!!
Read Time:1 Minute, 8 Second
சல்மான் கானின் படம் கிக்கில் நடிக்க தீபிகா படுகோனை அணுகியதாகவும், அவர் சல்மானுடன் நடிக்க நோ சொன்னதால் வேறு நடிகை நடிக்க வைத்ததாகவும் வதந்தி.
கிக் படம் ஓடி முடிந்த பிறகும் இந்த வதந்தி தீபிகாவை வால் போல் தொடர்கிறது.
பொறுத்துப் பார்த்த தீபிகா படுகோன் படுகோபமாக பொரிந்துவிட்டார்.
எந்த முட்டாள் அப்படி சொன்னது? யாரையும் வேண்டாம் என்று சொல்கிற இடத்தில் நான் இல்லை. எல்லாம் டேட்ஸ் பிரச்சினை.
டேட்ஸ் பிரச்சனையில் தலையை பிய்த்துக் கொண்டிருப்பவர்களுக்குதான் அதன் வலி தெரியும் என்று தெற்கு வடக்காக பொரிந்துவிட்டார்.
தீபிகா இதற்கு முன் மூன்று படங்களில் சல்லு பாயுடன் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating