ஸ்ரீரங்கத்தில் தீவிரவாதத்துக்கு எதிராக முஸ்லிம்கள் பிரசாரம்!!
Read Time:1 Minute, 9 Second
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழ்நாடு முழுவதும் தீவிரவாதத்திற்கு எதிராக தெருமுனை பிரசாரம் ஸ்ரீரங்கத்தில் நடந்தது.
ஸ்ரீரங்கம் ,கூத்தூர், சமயபுரம், மேலவாளாடி, தாளக்குடி ஆகிய கிளை அமைப்புகள் ஸ்ரீரங்கம் பகுதியில் செக்போஸ்ட், மேல கொண்டையம்பேட்டை மற்றும் திருவளர்சோலை ஆகிய இடங்களில் பிரசாரம் நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தூர் கிளை தலைவர் அப்துல் ரகுமான் தலைமை தாங்கி முஸ்லிம்கள் தீவிரவாதத்திற்கு எதிரானவர்கள். மனிதநேயத்திற்கு ஆதரவானவர்கள் என்பதை வலியுறுத்தி பேசினார்,
மேலும் இந்த அமைப்பினர் துண்டுபிரசுரங்கள் வினியோகம், தனிநபர் விளக்கம் ஆகிய வழிகளிலும் தீவிரவாதத்திற்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறார்கள்.
Average Rating