கருங்கல்: கள்ளக்காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்திய இளம்பெண்!!

Read Time:6 Minute, 12 Second

1683345e-051f-424f-89f2-2bd32af6997e_S_secvpfகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்தவர் சோமு (வயது 38). இவரது மனைவி ரேவதி (27) இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

சோமு கட்டிட வேலைக்காக வெளிநாட்டுக்கு சென்றார். இங்கு அவரது மனைவியும், குழந்தைகளும் வசித்து வந்தனர்.

சோமு வெளிநாட்டில் வேலை பார்த்தபோது தனது ஊரைச் சேர்ந்த ரமேஷ் 27 ( பெயர்கள் மாற்றப்பட்டு உள்ளது) என்பவரும் அங்கு கட்டிட வேலை பார்ப்பதை கண்டார்.

ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால் சோமுவும், ரமேசும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். ரமேஷ் அடிக்கடி சொந்த ஊருக்கு வந்து சென்றார். அப்போது தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள், பணம் ஆகியவற்றை சோமு, ரமேசிடம் கொடுத்து அனுப்பினார்.

ஊருக்கு வந்ததும் ரமேஷ், சோமு கொடுத்த பொருட்களை அவரது வீட்டுக்கு நேரில் சென்று கொடுத்தார். அப்போது ரமேசுக்கும், சோமுவின் மனைவி ரேவதிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதில் அவர்களுக்கு இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அடிக்கடி அவர்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர்.

கணவர் வெளிநாட்டில் இருந்ததால் ரேவதி, ரமேசை உடும்பு பிடியாக பிடித்துக்கொண்டார். ரமேஷ் ஊருக்கு வரும்போதெல்லாம் இவர்களது உல்லாச வாழ்க்கை தொடர்ந்தது.

ரேவதியை சந்திப்பதற்காகவே ரமேஷ் வெளிநாட்டில் இருந்து அடிக்கடி விடுமுறை எடுத்துக்கொண்டு ஊருக்கு வந்தார். ரமேஷ்– ரேவதியின் லீலைகளை அறிந்த ரமேசின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். ரமேசுக்கு புதுக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை பார்த்து திருமணம் பேசி முடித்தனர்.

வருகிற 13–ந் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு அழைப்பிதழ்களும் அச்சிடப்பட்டது. திருமணத்துக்கு சில நாட்களே இருந்ததால் அழைப்பிதழ் கொடுப்பதில் ரமேசின் குடும்பத்தினர் தீவிரமாக இருந்தனர்.

ரமேசுக்கு பேசி முடிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிலும் உற்சாகம் கரைபுரண்டு இருந்தது. சொந்தக்காரர்கள் வருவதும், போவதுமாக பெண்ணின் வீடு களை கட்டி இருந்தது.

இந்தநிலையில் நேற்று இரவு ரேவதி, ரமேசுக்கு பேசி முடிக்கப்பட்ட பெண்ணின் வீட்டு வாசலில் போய் நின்று கதறி அழுதார். எனக்கும், ரமேசுக்கும் தொடர்பு உள்ளது, ரமேஷ் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி என்னை சீரழித்துவிட்டார். இப்போது உங்கள் மகளை அவருக்கு திருமணம் செய்து வைத்தால் அவரது வாழ்க்கையும் சீரழிந்துவிடும். எனவே ரமேசுக்கு பெண் கொடுக்காதீர்கள் என்று கூறி சத்தம் போட்டார்.

ரேவதியின் புகாரை கேட்டு பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். ரேவதி சத்தம்போடுவதை கேட்டு அந்த பகுதியினரும் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ரேவதியின் புகாரை நம்பாத சிலர் அவரை புதுக்கடை போலீஸ்நிலையம் அழைத்துச் சென்றனர். அவரிடம் போலீசார் விசாரித்து உண்மையை அறிய வேண்டும் என வலியுறுத்தினர்.

போலீசார் ரேவதியை தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது ரேவதிக்கும், ரமேசுக்கும் தொடர்பு இருந்தது உண்மை என தெரியவந்தது. ரேவதியுடன் கள்ளத்தொடர்பில் மூழ்கி இருந்த ரமேசுக்கு புதுக்கடை பெண்ணை திருமணம் செய்வதில் விருப்பம் இல்லை. ரேவதியுடனான உல்லாச வாழ்க்கையை அவர் விரும்பினார்.

இதனால் ரேவதியையே பெண் வீட்டுக்கு போகச் சொல்லி கள்ளத்தொடர்பை கூறி திருமணத்தை நிறுத்துமாறு கூறி உள்ளார். ரமேசின் திட்டப்படி ரேவதியும் போய் ஒப்பாரி வைத்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து ரமேசை போலீசார் புதுக்கடை போலீஸ்நிலையம் வரவழைத்தனர். ரமேசையும், ரேவதியையும் போலீசார் எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

ரமேசின் கள்ளக்காதலை திருமணத்தின் முன்பே அறிந்த புதுக்கடை பெண்ணின் குடும்பத்தினர் திருமணத்தை உடனடியாக நிறுத்துவதாக கூறினர். திருமண நிச்சயத்தின் போது தாங்கள் அளித்த பணம் மற்றும் பொருட்களை உடனடியாக திருப்பி தரவேண்டும் என ரமேசின் குடும்பத்தினரிடம் அவர்கள் கேட்டனர். அதன்படி ரமேசின் வீட்டாரும் அனைத்து பொருட்களையும் திருப்பிக்கொடுத்தனர்.

நேற்று நள்ளிரவு விடிய, விடிய நடந்த இந்த சம்பவம் கருங்கல் மற்றும் புதுக்கடை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தூத்துக்குடியில் புதுமாப்பிள்ளைக்கு கத்திக்குத்து: வாலிபர் கைது!!
Next post தர்மபுரியில் ஆசைக்கு இணங்க மறுத்த அண்ணிக்கு கத்திக்குத்து!!