விருதுநகர் அருகே 2 மாணவிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்: அதிகாரிகள் நடவடிக்கை!!
Read Time:1 Minute, 21 Second
விருதுநகர் மாரனேரி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த 9–ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவிக்கும், அதே ஊரை சேர்ந்த டெய்லர் வேலைபார்க்கும் தங்கப்பாண்டிக்கும் (வயது25) இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடக்க இருந்தது.
இதேபோல திருச்சுழி அருகே காளையார் கரிசல்குளத்தை சேர்ந்த 9–ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவிக்கும், ஈரோடு மாவட்டம் சிவகிரியில் ஒர்க்ஷாப் வைத்துள்ள செந்தில்குமாருக்கும் (28) இன்று திருமணம் நடப்பதாக இருந்தது.
மேற்கண்ட 2 திருமணங்கள் தொடர்பாக விருதுநகர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி பாண்டியம்மாளுக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் சைல்டு லைன் அமைப்பினர் மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், மாணவிகளின் திருமணங்களை தடுத்து நிறுத்தினார்கள். மாணவிகளை மீட்டு விருதுநகர் குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர்.
Average Rating