மீரியபெத்தை மண்சரிவில் 37 பேரே பலியாகினர் – அமைச்சர் தகவல்!!
Read Time:1 Minute, 18 Second
மீரியபெத்தை மண்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 37 என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மண்சரிவுக்குள் சிக்கிய 13 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மண்சரிவுக்குள் சிக்கிய மேலும் 24 பேர் காணாமல் போயுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் உறவினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
உயிரிழந்தவர்களுக்கு மரண சான்றிதழ் விநியோகிக்கும் நடவடிக்கை பண்டாரவளை மற்றும் ஹல்துமுல்லை பிரதேச செயலகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை, மீரியபெத்தை மண்சரிவு பகுதி பாதுகாக்கப்பட்டு அங்கு நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.
Average Rating