களுத்துறைக்கு 12 மணிநேர நீர்த்தடை!!
Read Time:1 Minute, 2 Second
களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (11) 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
நாளை காலை 9 மணி தொடக்கம் இரவு 9 மணிவரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு, வஸ்கடுவ, வாத்துவ, பேருவளை, அளுத்கம, பயாகல, தர்காநகர், பொம்புவல மற்றும் பிலிமத்தலாவ ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைசெய்யப்படவுள்ளது.
குறித்த பகுதிகளில் மின்தடை ஏற்படவுள்ளதால் நீர்த்தடையும் செய்யப்படுவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
Average Rating