தந்தையின் மரணம் குறித்துகூட தேடாத சஜித் ஜனாதிபதியாக முயற்சிக்கிறார் – பீலிக்ஸ்!!

Read Time:1 Minute, 45 Second

8360038823226598967-Lஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முயற்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஒருநாளும் அமைச்சர் பதவியைகூட வகிக்காதவர் என சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஜா-எல துடெல்ல நகரில் ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கை அலுவலகம் ஒன்றை இன்று (10) திறந்து வைத்து உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

சஜித் பிரேமதாஸ தனது தந்தையான ரணசிங்க பிரேமதாசவின் கொலை தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அழுத்தம் கொடுக்கவில்லை என பீலிக்ஸ் பெரேரா குற்றம் சுமத்தினார்.

பிரேமதாஸ கொலை செய்யப்பட்ட இடம் ஒரு மணிநேரத்திற்குள் கழுவி சுத்தம் செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

என்னை போன்ற ஒருவரின் தந்தைக்கு இப்படியான அகால மரணம் சம்பவித்திருந்தால் அதனால் ஏற்படும் அதிர்ச்சி பேரதிர்ச்சியாக இருந்திருக்கும் என்று கூறிய அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா, அப்படி நடந்திருந்தால் உரிய விசாரணைகளை நடத்திய குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம்? -யதீந்திரா (கட்டுரை)!!
Next post பொது வேட்பாளர் என்றால் துன்பங்களுக்கு முகங்கொடுக்க தயாராக வேண்டும் – மனோ!!