விக்னேஸ்வரனின் கருத்துக்கள் அடிப்படை அற்றவை – டக்ளஸ்!!
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அண்மைக்காலமாக வெளியிட்டு வரும் கருத்துக்கள் அடிப்படையற்றவை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (10) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கருத்துக்களில் உண்மை இல்லை என்பதால் அவற்றை கவனத்தில் கொள்ளத் தேவையில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் இராணுவத்தினர் குற்றம் இழைப்பதாக கூறுவதில் உண்மையில்லை எனவும் சில குற்றச்சாட்டுக்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக இவ்வாறு முன்வைக்கப்படுகின்றது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனால் வடக்கு முதலமைச்சரின் கருத்துக்களை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என கூறியுள்ள அமைச்சர், விக்னேஸ்வரன் கடந்த காலங்களிலும் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
வடக்கு அபிவிருத்திக்காக வட மாகாண சபைக்கு அரசாங்கம் வழங்கிய நிதியில் 27 வீதமான பணத்தையே மாகாணசபை செலவிட்டுள்ளதாக டக்ளஸ் கூறினார்.
Average Rating