30 வயது நபர் 15 வயது மாணவியை பாலியல் பலாத்காரம்!!

Read Time:2 Minute, 47 Second

2135384719karnatakaகர்நாடகாவில் பாடசாலை மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது தொடர் கதையாகி விட்டது. பெங்களூரில் மட்டும் 3–க்கும் மேற்பட்ட பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளது.

இப்போது சிமோகா மாவட்டத்தில் மாணவியின் பாலியல் பலாத்கார சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிமோகா மாவட்டம் ஒசநகர் தாலுகா மாருதிபுரா பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி சுகன்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஒசநகரில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அவள் பாடசாலைக்கு சென்றுவிட்டு மாருதிபுரா நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ரபீக் (30) என்பவர், சுகன்யாவை மறைவான பகுதிக்கு தூக்கி சென்று வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார். அப்போது மாணவி, கூச்சலிட்டார். அவரது கூச்சல் சத்ததை கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர்.

உடனே ரபீக், அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் பொதுமக்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவரை ஒசநகர் பொலிசில் ஒப்படைத்தனர்.

பொலிசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அந்த பகுதி மக்கள், மாணவி சுகன்யாவை ஒசநகர் அரசு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதற்கிடையே இது பற்றி தகவல் அறிந்த, சுகன்யாவின் உறவினர்கள், ஒசநகர் பொலிஸ் நிலையத்துக்கு விரைந்து வந்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைதான, ரபீக் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினார்கள்.

அப்போது அவர்கள் பொலிஸ் நிலையம் முன்பு டயரை கொளுத்தியும், அந்த பகுதியில் உள்ள கடைகள் மீது கற்களை வீசி எரிந்தும் ரகளையில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பொலிசார் குவிக்கப்பட்டனர். பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்ணை நிர்வாணமாக்கி கழுதையில் ஏற்றி ஊர்வலம்!!
Next post அனல் பறக்கும் முத்தம் கொடுத்த கோலி!!