பெண்ணை நிர்வாணமாக்கி கழுதையில் ஏற்றி ஊர்வலம்!!
ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் துர்வல் எனும் மலைவாழ் மக்கள் கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தைச் சேர்ந்த வர்திசிங் என்பவர் கடந்த 2–ந் திகதி திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.
வர்திசிங் மனைவியும் தன் கணவர் எப்படி மரணம் அடைந்தார் என்று புரியாமல் தவித்தார். திடீரென அவருக்கு வர்திசிங்கின் சித்தி மீது சந்தேகம் ஏற்பட்டது. சித்திதான் பில்லி சூனியம் வைத்து தன் கணவரை கொன்று விட்டதாக நினைத்தார்.
இதுபற்றி அவர் துர்வல் கிராம பஞ்சாயத்தில் புகார் செய்தார். இதையடுத்து பஞ்சாயத்து கூடியது. நூற்றுக்கணக்கான மக்கள் பஞ்சாயத்து கூட்டத்தில் திரண்டிருந்தனர்.
பஞ்சாயத்தில் சுமார் 45 வயதுடைய வர்திசிங்கின் சித்தி குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். அவரை கழுதை மேல் ஏற்றி ஊரை சுற்றி வரும்படி பஞ்சாயத்து தலைவர் உத்தரவிட்டார். உடனே சிலர் கும்பலாக சென்று அந்த பெண்ணின் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தினார்கள்.
பிறகு அவரை ஒரு கழுதையில் ஏற்றி கிராமம் முழுக்க சுற்றி வர செய்தனர். நூற்றுக்கணக்கான ஆண்கள் முன்னிலையில் நிர்வாணமான நிலையில் சுமார் 1 மணி நேரம் அந்த பெண் இந்த கொடூரத்துக்கு உள்ளாக்கப்பட்டார்.
இதுபற்றி அந்த பெண்ணின் கணவர் நேற்று பொலிசில் புகார் செய்தார். அதன் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து அந்த கிராமத்தைச் சேர்ந்த 30 பேரை கைது செய்தனர்.
அவர்களில் 9 பேர் வர்திசிங்கின் உறவினர்கள் ஆவார்கள். அந்த கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் இன்று காலை முதல் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Average Rating