திருமணம் செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றி கற்பழித்த டாக்டர்!!
Read Time:1 Minute, 21 Second
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் டாக்டர் ஒருவர் திருமணம் செய்வதாக கூறி கற்பழித்து ஏமாற்றி விட்டதாக பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்தூரில் உள்ள பாலசியா பகுதியில் ஹோமியோபதி கிளினிக் நடத்தி வருபவர் அர்பித் சோப்ரா. இவர் ஒரு பெண்ணுடன் நெருங்கி பழகி உள்ளார். அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதா கூறி உல்லாசமாக இருந்துள்ளனர். இவர்களிடையே இந்த உறவு இரண்டு வருடங்களுக்கு மேலாக இருந்துள்ளது.
பின்னர்தான், அர்பித் சோப்ராவிற்கு ஏற்கனவே திருமணம் ஆன விஷயம் அந்த பெண்ணுக்கு தெரிய வந்துள்ளது. இதனால் அவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே கடந்த 7-ந்தேதி அர்பித் சோப்ரா அந்த பெண் தன்னை தாக்கியதாக போலீசில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating