இளம்பெண்ணை கற்பழித்து செல்போனில் படம் எடுத்து மிரட்டிய வெளிநாட்டு வங்கி அதிகாரி கைது!!

Read Time:3 Minute, 48 Second

0656dae1-6dac-4b99-874e-5ae9c53c5fa8_S_secvpfபெங்களூர் மாகடி ரோட்டில் வசித்து வருபவர் பிரவீன் குமார் (வயது 25). வெளிநாட்டு வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவர் பி.யூ.சி. படிக்கும் போது ஆசிரியை ஒருவர் வீட்டிற்கு தினமும் டியூசன் படிக்க செல்வது வழக்கம். இவர் படிப்பை முடித்த பிறகும் ஆசிரியை வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவார். அப்போது ஆசிரியையின் மகள் மஞ்சுவிடம் (பெயர் மாற்றம்) சகஜமாக பேசுவார். இதை யாரும் தவறாக எடுத்து கொள்ளவில்லை.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மஞ்சுவை பிரவீன் தனது பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ள அழைத்தார். அதனை ஏற்று மஞ்சு, பிரவீன் வீட்டிற்கு சென்றார். ஆனால் அங்கு பிறந்தநாள் விழாவுக்கான எந்த அறிகுறியும் இல்லை. இதுபற்றி மஞ்சு கேட்டபோது இன்னும் சற்று நேரத்தில் எல்லோரும் வருவார்கள் என்று கூறினார். அப்போது மஞ்சுவுக்கு குடிப்பதற்காக குளிர்பானம் கொடுத்தார். அதனை குடித்த மஞ்சு மயங்கி விழுந்தார். இதனை சாதகமாக்கி கொண்டு பிரவீன், மஞ்சுவை கற்பழித்தார்.

மேலும் அதனை பிரவீன், தனது செல்போனில் படம்பிடித்து உள்ளார். மயக்கம் தெளிந்த மஞ்சு தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி கண்ணீர்விட்டு அழுதார். ஆனால் தனது பெற்றோருக்கு பயந்து இதுபற்றி வீட்டில் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் பிரவீன் மஞ்சுவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறி இருக்கிறார். ஆனால் பிரவீனை திருமணம் செய்ய மஞ்சு மறுத்து விட்டார். உடனே பிரவீன் தான் ஏற்கனவே செல்போனில் படம் பிடித்து வைத்து இருந்த அந்த ஆபாச வீடியோ காட்சியை மஞ்சுவிடம் காண்பித்து தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

ஆனால் மஞ்சு, பிரவீனை திருமணம் செய்ய உறுதியாக மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரவீன், தனது செல்போனில் மஞ்சுவை ஆபாசமாக படம் பிடித்து வைத்து இருந்ததை சி.டி.யில் பதிவு செய்து அதனை மஞ்சுவின் தாயான ஆசிரியைக்கு அனுப்பி வைத்து இருக்கிறார். இதுபற்றி அறிந்த ஆசிரியை அதிர்ச்சி அடைந்தார்.

மகளுக்கு நேர்ந்த கொடுமைபற்றி ஆசிரியை போலீசில் புகார் செய்தார். சைபர் கிரைம் போலீசார் பிரவீனை கைது செய்தனர்.

அவரது செல்போனில் இருந்து ஆபாச வீடியோ காட்சியையும், படங்களையும், போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே பிரவீன் அந்த வீடியோ காட்சிகளை தனது நண்பர்கள் சிலருக்கும் அனுப்பி இருப்பது தெரிய வந்து உள்ளது. அது பற்றியும் போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடத்தப்பட்டு, 6 மாதங்களாக நால்வரால் கற்பழிக்கப்பட்ட இளம்பெண் தப்பிவந்து போலீசில் புகார்!!
Next post செல்போன் வாங்கித்தர தந்தை மறுத்ததால் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து 8-ம் வகுப்பு மாணவன் தற்கொலை!!