மலவாயிலில் இருந்து தங்க பிஸ்கட்கள் வந்த கதை: இருவர் கைது!!
சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு மலவாயிலில் மறைத்து தங்க பிஸ்கட்களை கடத்திய இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
75 லட்சம் ரூபா பெறுமதியான 15 தங்க பிஸ்கட்களை கடத்திய இருவரும் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வத்தளை மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
இன்று அதிகாலை 2.05 அளவில் சிங்கப்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஈ.கே 349 என்ற விமானத்தில் வந்த பயணிகளை சோதனைக்கு உட்படுத்தியபோது இருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அதன்போது ஒரு சந்தேகநபரின் மலவாயிலில் இருந்து 3 தங்க பிஸ்கட்களும் மற்றைய நபரின் மலவாயியில் இருந்து 12 தங்க பிஸ்கட்களும் மீட்கப்பட்டதாக சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
Average Rating