நாடி துடிப்பு இன்றி 45 நிமிடம் உயிர் வாழ்ந்த குழந்தை!!

Read Time:1 Minute, 48 Second

rubyஅமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள போகா ரேடன் பகுதியை சேர்ந்த பெண் ரூபி கிராயுபெரா காசிமிரோ (40). நிறைமாத கர்ப்பிணி ஆக இருந்த அவரை பிரசவத்துக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு ‘சிசேரியன்’ அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்கப்பட்டது. அதை தொடர்ந்து டாக்டர்கள் குழு சுமார் 3 மணி நேரம் ஆபரேசன் செய்தனர்.

அப்போது திடீரென ரூபியின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. பனிக்குடத்தின் நீர் அவரது ரத்தத்தில் கலந்து விட்டது. இதனால் ரத்த ஓட்டத்தில் உறைவு ஏற்பட்டது.

அதை தொடர்ந்து அவரது நாடி துடிப்பு சுமார் 45 நிமிடங்கள் நின்று விட்டது. எனவே, அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் முடிவு செய்தனர். இது குறித்து அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்து விட்டனர்.

அனைவரும் சோகத்துடன் இருந்தனர். ஆனால் இதய துடிப்பு நின்ற நிலையிலும் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அது நல்ல உடல் நலத்துடன் இருந்தது.

இதற்கிடையே, இறந்ததாக கருதப்பட்ட ரூபி திடீரென மீண்டும் உயிர் பிழைத்தார். இவரது இதயம் துடிக்க தொடங்கியது. நாடி துடிப்பு மீண்டும் உயிர் பெற்றது.

அது மருத்துவ உலகின் ஒரு மிகப்பெரிய அதிசயம் என டாக்டர்கள் வர்ணிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டேராடூனுக்கு துணைவருடன் சுற்றுலா வந்த டெல்லி பெண்ணை கற்பழித்து இருவரையும் கொன்ற டாக்சி டிரைவர் கைது!!
Next post ஜெனீவா விஞ்ஞானிகள் கண்டு பிடித்தது கடவுளின் துகள் அல்ல: புதிய தகவல்!!