தெருவை கூட்டி சுத்தம் செய்த நடிகை!!
பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் நடிகர், நடிகைகள் பங்கேற்று வருகின்றனர். இந்தி நடிகர்கள் பலர் துடைப்பம் ஏந்தி தெருக்களை சுத்தம் செய்த வண்ணம் இருக்கிறார்கள். இதனால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.
நடிகர் கமலஹாசன் தனது பிறந்தநாளில் மாடம்பாக்கம் ஏரியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். ஏராளமான கமல் ரசிகர்களும் இதில் பங்கேற்று ஏரி குப்பைகளை அகற்றினார்கள்.
நடிகை தமன்னாவும், தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்துள்ளார். மும்பை லோகந்த் வாலாவில் ஒரு பகுதியில் குப்பைகளை கொட்டி போட்டு இருந்தனர். இதனால் அங்கு துர்நாற்றம் வீசியது நோய்கள் பரவும் அபாயமும் இருந்தது.
நடிகை தமன்னா அந்த பகுதிக்கு துடைப்பத்துடன் சென்றார். குவித்து போடப்பட்டு இருந்த குப்பைகளை கூட்டி சுத்தம் செய்தார். தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்களும் தமன்னாவுடன் இணைந்து குப்பைகளை அள்ளும் பணியில் ஈடுபட்டனர். இதுபோல் தொடர்ந்து குப்பைகளை அகற்றும் பணியில் தமன்னா ஈடுபடப்போகிறாராம்.
Average Rating