கற்பிட்டியில் கடற்படையினர் புலிகள் மோதல்

Read Time:1 Minute, 13 Second

Slk-map.jpgகற்பிட்டியில் கடற்படையினர் புலிகள் மோதல்- புத்தளம் கற்பிட்டியிலிருந்து சுமார் 10கிலோமீற்றர் தொலைவிலுள்ள பளுக்காதுறை கடற்பரப்பில் கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்குமிடையில் இன்றுமுற்பகல் 11.15மணியிலிருந்து ஒன்றரை மணித்தியாலங்கள் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது. இம்மோதலில் கடற்படை படகுகள் இரண்டு சேதமடைந்துள்ளதுடன் மூன்று கடற்படையினர் காயமடைந்துள்ளனர். சுமார் 15படகுகளில் சென்ற புலிகள் தாக்குதல்களை நடத்தியதாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. புலிகளின் இரு படகுகள் முற்றாக சேதமுற்றதாகவும், இம்மோதலில் 12புலிகள் பலியாகியிருக்கலாமென நம்புவதாகவும் இராணுவ ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. மோதலின்போது வான்படையினரின் வானு}ர்த்திகள் கடற்படைக்கு உதவி வழங்கியுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தனது சகோதரரை கத்தியால்குத்தி கொலைசெய்த இலங்கைத் தமிழருக்கு எட்டுவருட சிறைத்தண்டனை –சுவிஸில் சம்பவம்
Next post சதாம்உசேனின் வக்கீல்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் அமெரிக்க வக்கீல் கோரிக்கை